பழனிச்சாமி – கருணாஸ்

னக்கு பாதுகாப்பு இல்லை என்றும் இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்தும் பலனில்லை என்று நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் கருணாஸ், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவுடன் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா தரப்புக்கு ஆதரவு தெரிவித்தார். பிறகு சசிகலா தரப்பிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விலகிய பிறகு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்தார்.

ஆனாலும் எடப்பாடி அரசை எதிர்த்து பேசிவருகிறார். தவிர சமீபத்தில் ஐ.பி.எல். போராட்டத்தில் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில் தனது சொந்தத் தொகுதியான திருவாடாணை வந்த கருணாஸ், தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தார். மேலும், இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

அதோடு, அமைச்சர் மணிகண்டன் குறுக்கீட்டினால் தனது திருவாடானை தொகுதி மக்களுக்கு எந்தப் பணியும் செய்யமுடியவில்லை என்றும் தெரிவித்தார்.