டில்லி:

நீட் எதிர்ப்பு போராட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி நடக்கும் போராட்டத்திற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ‘‘நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்த தடை விதிக்கவில்லை.

நீட் தேர்வுக்கு எதிராக சட்டம், ஒழுங்கு பாதிக்காத வகையில் அமைதியான வழியில் போராட்டம் நடத்தலாம்.

சட்டம், ஒழுங்கு பாதித்தால் தமிழக தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் போராட்டம் நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்’’ என தெரிவித்துள்ளனர்.