சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகி வி.என்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் நமது அன்புத்தலைவர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை.

ஆகையால் யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ, ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரிலோ, மன்றத்தின் கொடியையோ, தலைவரின் பெயரையோ, புகைப் படத்தையோ பயன்படுத்தி வாக்குசேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ரஜினி அரசியல் பிரவேச அறிவிப்பு வெளியானதில் இருந்து, பல தேர்தல்கள் நடைபெற்றன. ஆனால், எந்த தேர்தலிலும் ரஜினி மக்கள் மன்றம் போட்டியிட வில்லை. 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலை நோக்கி பயணிப்பதாக கூறி இருந்தார்.