மும்பை,

ர்ச்சியால், பாலிவுட்டை மட்டுமல்ல, கோலிவுட்டையும் கதிகலங்க வைப்பவர் நடிகை சன்னி லியோன். இவரது AAAA (!) ரக யூடியூப் சேனல்களும் ஏக பிரபலம். இதனாலேயே இவருக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததும் உண்டு.

இந்திய – கனடிய பெற்றோருக்குப் பிறந்த இவர், தற்போது மும்பையில் வாழ்கிறார்.. தனது ஆண் நண்பருடன். இந்தி பட வாய்ப்புகள் அதிகம் வருவதால் மும்பை வாசம்.

இப்போது ஒன்றே முக்கால் வயது குழந்தையை தத்து எடுத்திருக்கிறார்.

நிஷா கவுர்  என்ற   அந்த குழந்தையுடன் தன் ஆண் நண்பருடன் சன்னி போஸ் கொடுத்திருக்கிறார். இந்த படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

“குழந்தையை பார்த்தவுடன் பிடித்துவிட்டதால் தத்தெடுக்க முடிவு செய்துவிட்டோம் என்றும், மூன்றே வாரத்தில் எங்களுக்கு  குழந்தை கிடைத்துவிட்டது.  9 மாதம் காத்திருக்க வேண்டியிருக்கும்”  என்று மகிழ்ச்சி பொங்கி தெரிவித்துள்ளார் சன்னி.

சமீபத்தில் இவர், “குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால் சினிமாவில் பிஸியாக இருப்பதால் குழந்தை பெற்றுக்கொள்ள நேரமில்லை. கர்ப்பனால் திரைப்படங்களில் நடிப்பது பாதிக்கும். ஆகவே தத்து எடுக்க விரும்புகிறேன். திடீர் என்று ஒரு நாள் கையில் குழந்தையுடன் வந்து நின்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவேன்” என்றார்.

இப்போது சொன்னதை செய்துவிட்டார் சன்னி!