ஸ்டாக் ஹோம்:   உயரிய விருதுகளில் ஒன்றான  நோபல் பரிசு, நடப்பாண்டில், பால்.ஆர் மில்க்ரோம், ராபர்ட் வில்சன் ஆகியோருக்கு  பொருளாதாரத்திற்கான வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடான நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுவது வழக்கம்.
நடப்பாண்டில் நோபல் பரிசு  அக்டோபர் 5ந்தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.  ஏற்கனவே மருத்துவத்துறைக்கும், , இயற்பியல் துறைக்கும்,  வேதியியல் துறைக்கும், இலக்கியத்துறை மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஹெபாடைடிஸ்-சி வைரசை கண்டுபிடித்த விஞ்ஞானிகளான ஹார்வே ஜே. ஆல்டர், சார்லஸ் எம்.ரைஸ், மைக்கேல் ஹாக்டன் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு கருந்துகளை உருவாக்கம், நட்சத்திர மண்டலத்தின் காணப்படும் அதிசய பொருள் கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்காக ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு ஜென்சல், ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
 வேதியியலுக்கான நோபல் பரிசை  இம்மானுவேல் சர்பென்டியர், ஜெனிபர் டவுட்னா ஆகிய 2 பெண் விஞ்ஞானிகள் கூட்டாக பெறுகிறார்கள். இலக்கியத்திற்கான நோபல் பரிசை, அமெரிக்க பெண் கவிஞர் லூயிக்லுக்கிற்கு அறிவிக்கப்பட்டது.
அமைதிக்கான நோபல் பரிசு  உலக உணவு அமைப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.  பால்.ஆர் மில்க்ரோம், ராபர்ட் வில்சன் ஆகிய இருவருக்கும்  பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏல கோட்பாடின் மேம்பாடு , ஏலத்திற்கான வடிவமைப்பு ஆகியவற்றை உருவாக்கியதற்காக இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
 அவர்களின் கண்டுபிடிப்புகள் உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள், வாங்குபவர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு பயனளித்துள்ளன” என்று நோபல் கமிட்டி கூறியுள்ளது.