டில்லி:

காவிரி நீர் பிரச்சினையில் எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்று உச்சநீதி மன்றம் அதிரடியாக கூறி உள்ளது.

காவிரி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் அதிகாரமில்லை என்றும் தலைமைநீதிபதி கூறி உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

காவிரி நதிநீர் பங்கீடு குறித்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று கூறிய உச்சநீதி மன்றம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 21ம் தேதி  முதல் விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில் இன்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி வருகிறது.