சுசித்ராவின் என்ட்ரி பிக் பாஸ் வீட்டில் சலசலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்த நிலையில் பெரிதாக எதுவும் நடைபெறவில்லை. உண்மையில் சுசித்ராவின் நடவடிக்கை பார்வையாளர்களுக்கும் சற்றே சலிப்பு தட்டியது என்பதால் என்னவோ அவர் இந்த வாரம் போட்டியாளர்களின் கவனத்தை பெற முடியாமல் போனது.

இந்நிலையில் முதல் ப்ரோமோ இன்று வெளியானது. அதில் நாமினேஷன் போது ஆரி கோபப்படுகிறார். ரியோ மற்றும் ரமேஷ் பார்த்து விட்டு செல்கின்றனர். போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு பிடிக்காத இரண்டு பேரை நாமினேட் செய்து இருக்கிறார்கள். இறுதியில் நாமினேஷன் லிஸ்டை காரணத்துடன் பிக் பாஸ் அறிவித்தார். Safe கேம் ஆடுறாங்க, ரூல்ஸ் பிரேக் பன்றாங்க, ராஜா வீட்டு கண்ணுகுட்டியா எந்த வேலையையும் பண்ணாம இருக்குறாரு போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி நாமினேட் ஆன நபர்கள் சோம், பாலா, ஆரி, ரமேஷ், அனிதா, சனம், நிஷா என பிக் பாஸ் கூறினார்.

தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில், நாமினேஷன் Topple எனும் முறையை அறிமுகப்படுத்துகிறார் பிக்பாஸ். சனத்திற்கு விட்டுக்கொடுக்க தயாரா இருக்கியா என்று ஆரி கேட்க, நான் விட்டெல்லாம் குடுக்க முடியாது என்று வெளிப்படையாக கூறுகிறார் நிஷா. திடீரென கோபப்பட்ட ரமேஷ், நாற்காலியில் இருந்து எழுந்து கோபமாக நடப்பது போல் காட்டப்பட்டுள்ளது. மேலும் சனம் தன் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துரைக்கிறார்.