.வட கொரியா – அமெரிக்க யுத்தம் துவங்குமோ என உலகமே பதைபதைப்பில் இருக்கும் சூழ்நிலையில் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்த வட கொரியா தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வட கொரியாவின் பேலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டம் குறித்து பதற்றம் அதிகரித்து வருகிறது.  இது இரு நாடுகளுக்கு இடையே போராக வெடிக்குமோ என்ற அச்சம் உலகம் முழுதும் பரவி வருகிறது.

இந்த நிலையில், வட கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி  ச்வை சன்-ஹுய், “  வட கொரியா மற்றும் அமெரிக்க இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை பரிசீலிக்கப்படும்” என்று பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இவர் வட அமெரிக்க விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர், “பேச்சுவார்த்தையில் அமெரிக்கா கலந்து கொள்ள வேண்டும் எனறால், வட கொரியா குறைந்த பட்சம் அதன் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்தோ அல்லது கைவிடுவது குறித்தோ விவாதிக்க வேண்டும்” என்று அமெரிக்க தரப்பில் கூறப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில், கிம் ஜோங் உன்னை சந்திப்பதை பெருமையாக கருதுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது.