அணு ஆயுத சோதனை தளத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ( கோப்பு படம்)

ட கொரியாவின் அணு ஆயுத சோதனை தளம்  பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும், பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால், கதிரியக்கப் பொருட்கள் வெளியேறுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் கொரிய மக்கள்.
வட கொரியாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள மலை பகுதியில் இந்த பூங்கே ரி தளம் அமைந்துள்ளது. மாண்டாப் மலைப்பகுதி என்று அழைக்கப்படும் மலைக்கு அடியில் இருக்கும் டனல் அமைப்புகளில் அணு ஆயுத சோதனை நடைபெறும்.

இங்கு கடந்த 2006ஆம் வருடத்தில் இருந்து ஆறு முறை ஆணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.

அந்த தளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் மலையின் உட்பகுதி சேதமடைந்தது என புவி ஆய்வு வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கடந்த சனிக்கிழமையன்று அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தி வைப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்திருந்தார்.

அணு ஆயுத சோதனையில் தீவிரமாக இருக்கும் அதிபர் கிம் ஜாங் உன் இப்படி அறிவித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வு அறிக்கை ஒன்றில், செப்டம்பர் மாதம் நடைபெற்ற அணு ஆயுத சோதனைக்கு பிறகு அந்த மலைப்பகுதியில் சோதனை நடைபெறும் இடத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கொண்டு எந்தவித அணு சோதனைகளுக்கும் மாண்டாப் மலைப்பகுதியை பயன்படுத்தக்கூடாது என்றும் அந்த ஆய்வு அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இறுதி அறிக்கையில், கதிரியக்க பொருட்களின் கசிவை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

செப்டம்பர் மாதம் பெரிய அளவில் அணு சோதனைகள் நடத்தப்பட்ட பிறகு மாண்டாப் மலைப்பகுதியின் டனல் சேதமடைந்திருக்கும் என சீன விஞ்ஞானிகள் ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. .