சென்னை:

மிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.  நாளை (17)ந்தேதி பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் பல இடங்களில் மழை பெய்து வருவதால், பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மையம், தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது,

தமிழகம் முழுவதும்,  ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்று தென்னிந்தியப் பகுதிகளில் பரவி பரவலாக மழை பெய்துள்ள நிலையில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்கி  உள்ளது.  தற்போது பெய்து வரும் மழை  அதிகபட்சமாக பூந்தமல்லியில் 11 செ.மீ., பாம்பனில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று கூறினார்.

மேலும்,   தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தமிழக கடற்கரையை ஒட்டி தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 2நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதே வேளையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் இரு தினங்களுக்கு இடைவெளி விட்டு மிதமான மழை தொடரும் என்றவர்  குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் வரும் 17, 18 ஆகிய தேதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.