அமிர்தசரஸ்:
மிர்தசரசில் நடந்த மாநகராட்சி தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகளை விட நோட்டா வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வாக்கு எண்ணிக்கை முடிவில் தெரிய வந்துள்ளது.

அமிர்தசரசில் மாநகராட்சியின் வார்டு எண் 37 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

அதிகாரபூர்வ வாக்கு எண்ணிக்கையின் படி, பாஜக வேட்பாளர் மனோகர் சிங் என்பவர், 52 வாக்குகள் பெற்றுள்ளார். இது இந்த தேர்தலில் பதிவான நோட்டா வாக்குகளின் எண்ணிக்கையான 60-ஐ விட குறைவாகும்.

இருப்பினும், காங்கிரஸ் வேட்பாளர் கன்தீப் சிங், 3 ஆயிரத்து 223 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள 40 வார்டுகளில் ஒரு வார்டில் கூட பாஜக வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.