பாட்னா:

மணிப்பூரில் பாஜக கூட்டணி ஆட்சிக்கான ஆதரவை மக்களவை தேர்தலுக்குப் பின் வாபஸ் பெறப் போவதாக நாகா மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.


முன்னாள் மணிப்பூர் முதல்வரும், நகா மக்கள் முன்னணி தலைவருமான டிஆர். ஜெலியாங் செய்தியாளர்களிடம் கூறும்போது, மணிப்பூரில் பாஜக கூட்டணி அரசின் முதல்வர் பிரேன் சிங்குக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது என கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மக்களவை தேர்தலுக்குப் பின் பாஜக கூட்டணிக்கு தெரிவித்து எங்கள் கட்சியின் 4 எம்எல்ஏக்களின் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று தெரிவித்தார்.

எனினும், எங்கள் ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என பாஜக தெரிவித்துள்ளது. 60 எம்எல்ஏக்கள் கொண்ட மணிப்பூர் சட்டப் பேரவையில், 40 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. அவர்கள் சென்றால் கூட எங்களுக்கு பாதிப்பில்லை என்று தெரிவித்துள்ளனர்.