மும்பை: என்ஆர்சி இந்துக்களையும் பாதிக்கும் என்று மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறி இருக்கிறார்.

இது குறித்து சாம்னாவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது: குடியுரிமை சட்டம் அனைத்து மத மக்களையும் பாதிக்கும் என்பதால் உத்தேச தேசிய குடிமக்களின் பதிவேட்டை செயல்படுத்த தமது அரசாங்கம் அனுமதிக்காது.

வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் குடியேறியவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது சிவசேனாவின் பழைய கோரிக்கையாகும்.  குடியுரிமை சட்டம் இந்திய குடிமக்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக அல்ல என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். ஆனால், தேசிய குடிமக்களின் பதிவான என்ஆர்சி இந்துக்களையும் பாதிக்கும்.

சொந்த நாடுகளில் துன்புறுத்தப்பட்ட பின்னர் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்த அண்டை நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினரின் எண்ணிக்கையை அறிய இந்தியாவுக்கு உரிமை உள்ளது.

பல காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் தங்கள் சொந்த நாட்டில் அகதிகளைப் போல தங்கியிருக்கின்றன. சிஏஏ என்று அந்த குடிமக்களை நாட்டிலிருந்து வெளியேற்றக்கூடாது.

என்ஆர்சியின் கீழ், அனைத்து குடிமக்களும் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும். அசாமில், 19 லட்சம் பேர் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க முடியவில்லை. அவர்களில் 14 லட்சம் இந்துக்கள்.

என்ஆர்சியின் கீழ், இந்துக்கள் கூட தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டியிருக்கும். நான் சட்டத்தை இயற்ற அனுமதிக்க மாட்டேன். நான் முதலமைச்சராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், யாருக்கும் அநீதியை அனுமதிக்க மாட்டேன் என்றார்.

பாக். பாடகர் அட்னான் சமிக்கு பத்மஸ்ரீ விருது பற்றிய கேள்விக்கு பதிலளித்த தாக்கரே, ஒரு புலம்பெயர்ந்தவர் ஒரு புலம்பெயர்ந்தவர் தான். அவரை பத்மா விருதுடன் ஒப்பிட்டு நீங்கள் கரவிக்க முடியாது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது என்பது எங்களின் நிறுவனர் பால் தாக்கேரேவின் நிலைப்பாடு என்று கூறினார்.