ஷார்ஜா: அமீரக நாட்டு லாட்டரியான அபுதாபி ‘பிக் டிக்கெட் ரேபில் டிரா -வில் அங்கு வசிக்கும் இந்தியர் ஒருவருக்கு, இந்திய மதிப்பில் ரூ.19.90 கோடி பரிசு கிடைத்துள்ளது.

கடந்த வெள்ளியன்று அறிவிக்கப்பட்ட இந்த ரேபில் டிரா முடிவுகளில், 35 வயதாக குர்பிரீத்  சிங் என்ற சீக்கிய இந்தியருக்கு(தற்போது அமீரக நாட்டில் வசிப்பவர்) இந்த பெரும் பரிசு கிடைத்துள்ளது. அவரின் எண் 067757.

ஒரு ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிவரும் இவர், தனது குடும்பத்துடன் ஷார்ஜாவில் வசித்து வருகிறார்.

இதுகுறித்து குர்பிரீத் சிங் கூறியதாவது, “நான் 5 வயது குழந்தையாக இருக்கும்போதே அமீரகம் வந்துவிட்டேன். எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த அமீரகம், தற்போது நம்பமுடியாத மெகா பரிசுப் பணத்தையும் கொடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நான் இந்த லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வருகிறேன். எனக்கு கிடைத்துள்ள பணத்தை வைத்து, இங்கு சொந்த வீடு வாங்க முடிவுசெய்துள்ளேன். பஞ்சாபில் வாழும் எனது பெற்றோரை இங்கு அழைத்து வரப்போகிறேன்” என்றார்.