புதுடெல்லி:

மத்திய பிரதேசத்தில் மாட்டை கொன்றதாக 3 பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்பதை மத்திய பிரதேச காங்கிரஸ் அரசுக்கு ராகுல் சுட்டிக் காட்டியுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பர் கூறியுள்ளார்.


ப.சிதம்பரம் எழுதிய இந்தியாவின் கொள்கை என்ற நூல் வெளியீட்டு விழா புதுடெல்லியில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா என்ற இடத்தில் இறைச்சிக்காக மாட்டை வெட்டியதாக 3 பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அம்மாநில காங்கிரஸ் அரசு கைது செய்துள்ளது.
இது தவறு. இதனை ராகுல்காந்தியும் தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

பாஜக அல்லாத கட்சியினருடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் ஆர்வமாக உள்ளது.

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். எனினும் லட்சக்கணக்கானோர் வேறு விதமாக சிந்திக்கிறார்கள். அப்படி சிந்திக்காதீர்கள் என்று நான் அப்படி கூறமுடியும். கட்சியினருக்கும் இவ்விசயத்தில் மாறுபட்ட கருத்து இருக்கும் என்றார்.