மும்பை

தேசிய பங்குச் சந்தை தொழில் நுட்பக் கோளாற்றால் முடங்கி உள்ளதாக டிவிட்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது

நாட்டின் வர்த்தக தலைநகர் என அழைக்கப்படும் மும்பை நகரில் தேசிய பங்குச் சந்தை அமைந்துள்ளது.   இங்கு சுமார் 1500க்கும் மேற்பட்ட நிறுவனப் பங்குகளின் வர்த்தகம் நடந்து வருகிறது.   இந்த தேசிய பங்குச் சந்தை எப்போதும் மும்முரமாகக் காணப்படுவது வழக்கமாகும்.   தற்போது இந்த பங்குச் சந்தை திடீரென முடங்கி உள்ளது.

தொழில்நுட்ப கோளாற்றினால் பங்குச் சந்தை வர்த்தகம் முடங்கியுள்ளதாகத் தேசிய பங்குச் சந்தை அறிவித்துள்ளது. இந்த தகவலைத் தேசிய பங்குச்சந்தை டிவிட்டர் மூலமாக உறுதி செய்துள்ளது.   அனைத்து செக்மென்ட்டுகளின் வர்த்தகமும் நிறுத்தப்பட்டு கேஷ் மார்க்கெட்டும் முடங்கியுள்ளது.

இது குறித்து டிவிட்டரில், “தொலைத்தொடர்பு சேவையை அளிக்கும் இரண்டு சர்வீஸ் புரவைடர்களுடன் சேவையைப் பெற்று வருகிறோம். அதன் இணைப்புகளில் சிக்கல் இருப்பதால் பங்குச் சந்தை வர்த்தகத்தின் சிஸ்டம் தற்போது முடங்கியுள்ளது. சிஸ்டத்தை மீட்டமைக்கும் பணி நடந்து வருகிறது. கூடிய விரைவில் இந்த சிக்கல் களையப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.