சென்னை:

ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என திமு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதற்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ மக்களுக்காக சிந்தித்து, மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் ஜெயலலிதா. அரசியல் நாகரீகம் இல்லாமல் அவரை பற்றி ஸ்டாலின் கருத்து கூறியுள்ளார்.

ஜெயலலிதா பற்றி காழ்ப்புணர்ச்சியோடு விமர்சனம் செய்வது துரதிருஷ்டவசமானது. ஜெயலலிதாவை தமிழக மக்கள் மனதில் இரு ந்து ஒரு போதும் அகற்ற முடியாது. அவரை விமர்சஜம் செய்வதை விட்டுவிட்டு மக்களுக்கு பயனுள்ள வேலையை செய்ய வேண் டும்’’ என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை தலைமைச் செயலகத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கு தான் தற்போது பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.