பெண்கள் படுக்கையில் பயனுள்ளவர்கள் என்று சர்ச்சை கருத்தை தெரிவித்த தெலுங்க நடிகர், எதிர்ப்பு காரணமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

ராரண்டோய் வேதுகா சுதம் என்ற தெலுங்கு படத்தில் நடிகர் சலபதி ராவின் கதாபாத்திரம் பேசுவதாக ஒரு சீன் உள்ளது. அதில்,  “பெண்களால் மன அமைதிக்கு காயம் ஏற்படும்” ஒரு வசனம் உள்ளது.

இந்த வசனம் குறித்து, நிகழ்ச்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதில் அளித்த சலபதி ராவ், “பெண்கள் தீங்கானவர்கள் அல்ல, படுக்கையில் பயனுள்ளவர்கள்” என்று கூறினார்.

சலபதி ராவின் இந்த பேச்சு தெலுங்கு திரையலகில் பரபரப்பை எற்படுத்தியது. அவரது பேச்சுக்கு  நடிகர்கள் நாக சைதன்யா, நாகார்ஜூனா, ராகுல் ப்ரீத் சிங் போன்ற பல திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, “எனது கருத்து திரிக்கப்பட்டுவிட்டது. எனது கருத்து யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று சரண்டராகி உள்ளார் சலபதி ராவ்.