சென்னை:
ரும் அக்டோபர் 2ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள், பார்கள் அனைத்துக்கும் விடுமுறை..
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூடப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பா.மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
”அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் அதனைச் சேர்ந்த பார்கள், எப்எல்2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சேர்ந்த பார்கள், எப்எல்3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சேர்ந்த பார்கள், எப்எல்3ஏ உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
அன்றைய தினத்தில் கண்டிப்பாக மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.
அதையும் மீறி மது விற்பனை செய்தால், மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.