புவனேஸ்வர்: ஒடிசாவில் புதிதாக 570 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒடிசாவில் கொரோனா பரவாமல் இருக்க மாநில அரசு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந் நிலையில் இன்று அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்புக்கு 570 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,526 ஆக உயர்ந்துள்ளது.  ஒரு பெண் உட்பட 5 பேர் புதிதாக பலியாகியுள்ளனர்.
ஒடிசாவில் கொரோனாவிற்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆகும். பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 384 பேர் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களிலும் மற்றும் 186 பேர் தொடர் கண்காணிப்பு மூலமாகவும் கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.