விசாக பட்டினம்

ந்திய வானிலை ஆய்வு மையம் ஒடிசா கடலோர பகுதிகளில் கனமழை பெய்யலாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின், விசாகப்பட்டினம் சூறாவளி எச்சரிக்கை மையத்தின் எம்.டி. சுனந்தா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,

”தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் நேற்று (14-ந்தேதி) ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி, வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய பகுதியில் காற்றழுத்த நிலையாக இன்று தீவிரமடைய கூடும்.

வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆந்திரப் பிரதேச கடலோர பகுதியில் நாளை (16-ந்தேதி) ஆழ்ந்த காற்றழுத்த நிலையாக அது, தீவிரமடைய கூடும். பிரகு வடக்கு-வடகிழக்கு நோக்கி சென்று வருகிற 17-ந்தேதி ஒடிசா கடலோர பகுதியைச் சென்றடையும்.

இதையொட்டி, ஒடிசா கடலோரம் உள்ளிட்ட சில பகுதிகளில் கன முதல் மிகக் கனமழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது  எனவே அடுத்த அறிவிப்பு வரும் வரை, இன்று  முதல் வரும் 17 ஆம் தேதி வரையிலான நாட்களில், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்”

என தெரிவித்துள்ளார்.