செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே படம் வரும் மே 31ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படமும் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் 38ஆவது படமான சூரரைப் போற்று என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், சூர்யா 39 ஆவது படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகவுள்ளது. அதன்படி, அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில், தனது 39ஆவது நடிக்க இருக்கிறார்.

விரைவில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.