பம்பா,

கி புயல் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டம் பலத்த பாதிப்புகளை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் கேரளாவிலும் பல பகுதிகளில் கனத்த மழை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், சபரிமலை வரும் பக்தர்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வரும்தோறும் நாடு முழுவதும் இருந்து சபரிமலை நோக்கி  லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக பக்தர்கள் வரத்தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், தற்போது கன்னியாகுமரி-கேரள கடல் எல்லைப் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஓகி புயல் காரணமாக பலத்த சூறைக்காற்றும், கனமழையும் பெய்து வருகிறது.

இதன் காரணமாக, அசம்பாவிதங்களை தவிர்க்க சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்கும்படியும்,  குறிப்பாக மலைப்பாதைகள் மற்றும் காடுகள் வழியாக செல்லும் பக்தர்கள் கட்டாயம் இரவு நேர பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்றும் பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.