சண்டிகர்:

ண்டுகள் பழமைவாய்ந்த நீராவி ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் அக்பர் என பெயரிடப்பட்டுள்ள நீராவி இன்ஜின் ரயில் பிரேக் லிவர் பழுது காரணமாக தடம் புரண்டு விபத்திற்கு உள்ளானது. அந்த ரயில் தொடர்ந்து 2 கி.மீ தூரம் சென்ற பின்னர் நின்றது. ரயில் டிரைவர்கள் இருவர் பேர் கீழே குதித்து உயிர் தப்பினர். இன்ஜினுடன் பயணிகள் பெட்டி இணைக்கபடவில்லை என்பதாலும், எதிர்த் திசையில் எந்த ஒரு ரயிலும் வரவில்லை என்பதாலும்  பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த ரயில்,  இருபதுக்கும்  மேற்பட்ட இந்தி திரைப்பட காட்சிகளில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.