மும்பை

பாஜக முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சே வரும் வெள்ளிக்கிழமை அன்று தனது  ஆதரவாளர்களுடன் தேசிய வாத காங்கிரஸில் இணைகிறார்.

மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் கட்சே, முந்தைய பாஜக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்.

அதன் பிறகு ஊழல் புகார் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அப்போது முதல் அவர் பாஜகவின் மீதும் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் மீதும் கடும் அதிருப்தியில் உள்ளார்.

பாஜகவில் இருந்து சமீபத்தில் விலகுவதாக அறிவித்த கட்சே தனது வாழ்க்கையை தேவேந்திர ஃபட்நாவிஸ் பாழாக்கியதாகக் குற்றம் சாட்டினார்.

ஏக்நாத் கட்சே வரும் வெள்ளிக்கிழமை அன்று தனது ஆதரவாளர்களுடன் தேசிய வாத காங்கிரஸில் இணைய உள்ளார்.

அவர் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் மாநில தலைவர் ஜயந்த் பாடில் உள்ளிட்டோர் முன்னிலையில் கட்சியில் இணைகிறார்.