சென்னை

நேற்று ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் தோனி தொடங்கி உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டிக்குப் பிறகு எந்த ஆட்டத்திலும் பங்கு பெறாமல் இருந்தார்.   அவர் ஏற்கனவே  டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.   ஆகவே டி 20 போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறக்கூடும் என வெளிவந்த தக்வலால் அவருடைய ரசிகர்கள் துயரம் அடைந்தனர்.

நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக விளையாடினால் அவர் மீண்டும் டி 20 இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.   வரும் 29 ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது.  இந்த ஹ்டொடரில் முதல் ஆட்டம் மும்பையில் நடைபெற உள்ளது.  இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோத உள்ளது.

இந்த போட்டிகளுக்கான பயிற்சியில் கலந்துக் கொள்ள நேற்று தோனி சென்னை வந்தார். அவர் சென்னையில் பயிற்சியைத் தொடங்கிய வீடியோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகார பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.   அந்த வீடியோவ்ல் அவர் ரசிகர்கள் தோனி தோனி என குரல் எழுப்ப அவர் களத்தில் இறங்குகிறார்.

இந்த வீடியோ தற்போது பலராலும் சமூக வலைத் தளங்களில் பரப்பப்பட்டு வைரலாகி வருகிறது.

[youtube https://www.youtube.com/watch?v=jjAUTelISbs?feature=youtu]