திசையன்விளை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

திசையன்விளை – நவ்வலடி சாலையில் உள்ள இசக்கி அம்மன் கோவில் முன்பு உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை யாரோ மர்ம நபர் திருடி சென்று விட்டார். இதுகுறித்து கோவில் நிர்வாகி மகராஜன் திசையன்விளை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளத்தை சேர்ந்த வாலிபர் முகமது அசன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து திருட்டுபோன பணம் மீட்டகப்பட்டது. கைது செய்யப்பட்ட முகமது அசன் மீது காஞ்சிபுரம், உவரி, நாங்குநேரி ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது.