டில்லி:

லைநகர் டில்லியில் உள்ள  கரோல்பாக் பகுதியில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்சி ஒருவர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

டில்லியில் உள்ள கரோல்பாக் பகுதியில் ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயில் சிக்கி அந்த தொழிற்சாலையில் இருந்த ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற்சாலையில் ஏராளமான துணி மூட்டைகள் இருந்தால் அவகைள் அனைத்தும் கொளுந்து விட்டு எரிந்து வருவதாக கூறப்படுகிறது.

5 தீயணைப்பு வாகனங்களுடன் தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.