கிருஷ்ணகிரி

மிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத ஒரே பச்சை மாவட்டமான கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது.

கொரோனா பாதிப்பையொட்டி சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மாவட்டங்களுக்கு வண்ணங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத ஒரே மாவட்டமான கிருஷ்ணகிரிக்குப் பச்சைநிறம் அளிக்கபட்டது.

இந்நிலையில் நேற்று இந்த மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் ஆந்திரா மாநிலம் புட்ட பருத்தி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வந்தவர் ஆவார்.

இவருடன் புட்ட பருத்தி சென்ற உறவினர்கள் 8 பேரும் மற்றவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.