கமதாபாத்

ரேந்திர படேலைத் தொடர்ந்து மற்றொரு படேல் இனத் தலைவர் நிகில் சவானி பா ஜ கவில் இருந்து விலகினார்

குஜராத் படேல் இனத் தலைவர்களில் ஒருவர் நிகில் சவானி.  இவர் சில வாரங்களுக்கு முன்பு செப்டம்பர் மாதத்தில் தனது ஆதரவாளர்களுடன் பா ஜ கவில் இணைந்தார்.  இவர் நரேந்திர படேலுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் எனச் சொல்லப்படுகிறது.    இரண்டு நாட்களுக்கு முன்பு பா ஜ கவில் இணைந்ததாக சொல்லப்படும் நரேந்திரபடேல் தனக்கு கட்சியில் இணைய ரூ. 1 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதைத் ஹ்டொடர்ந்து நிகில் சவானி, “நான் நரேந்திர படேலுக்கு ரூ. 1 கோடி பேரம் பேசியதாக வந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.  அப்படிப்பட்ட ஒரு கட்சியில் இனியும் நான் தொடர விரும்பவில்லை.  எனவே நான் கட்சியில் இருந்து விலகுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.