கள்ளக்குறிச்சி:

மிழகத்தை பதபதைக்க வைத்த  பொள்ளாச்சி பாலியம் சம்பவம் போல கள்ளக்குறிச்சி பகுதியிலும் அரங்கேறிய கொடுமை  வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரு கும்பல் மிரட்டி, கரும்பு தோட்டத்துக்குள் தூக்சிசென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவங்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து காவல்துறையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று கள்ளக்குறிச்சி அரசு கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் 2ம் ஆண்டு படித்து வரும் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை,   கல்லூரிக்கு செல்லும்போது கள்ளக்குறிச்சி  அம்மன் நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பைனான்சியர் ராஜா (45) மற்றும் அவரது நண்பர் வஉசி நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வேலுமணி(24) ஆகியோர்  தினமும் பின் தொடர்ந்து சென்று பாலியல் ரீதியாக பேசி தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இதனால் பாதிப்படைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்களும், அந்த 2 பேரையும் எச்சரித்தும், அவர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதையடுத்து, அந்த மாணவியின் தாய் கள்ளக்குறிச்சி காவல்துறையில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார்வழக்கு பதிந்து ராஜா மற்றும் அவரது நண்பர் வேலுமணி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட அதிரடி விசாரணையில் பைனான்சியர் ராஜா பல இளம்பெண்களை மிரட்டி தனது மொபைல் பேனில்  ஆபாச படம் எடுத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

அவரது மொபைலை ஆராய்ந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதில் ஏராளமான பள்ளி கல்லூரி பெண்கள் மற்றும் பல பெண்கள் குளிக்கும் படங்கள், வீடியோக்கள் உள்ளது தெரிய வந்தது. மறை முகமாக செல்போனில் படம் எடுக்கும் ராஜா, அந்த படத்தைக்காட்டி பலரை மிரட்டி, கரும்பு தோட்டத்துக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் கொடுமையை போலவே, பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் படங்களை அழிக்க கோரும்போது, மீண்டும் மீண்டும் அவரை பாலியல் வன்புணர்வு அழைத்துச்சென்று நாசப்படுத்தி உள்ளார். சுமார் 200க்கும் மேற்பட்ட பணிகளிடம் ராஜா தவறாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து   போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதில் பைனான்சியர் ராஜா தலைமையில் 4 பேர் கொண்ட கும்பல் இளம் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை திட்டமிட்டு வலை வீசி தங்கள் இச்சைக்கு பலியாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இதற்காக கரும்பு தோட்டத்தில் சொகுசு கொட்டகை போடப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில், ஏராளமான  மதுபான காலி பாட்டில்கள் குவியலாக கிடக்கிறது. மதுபோதையில் பள்ளி, கல்லூரி மாணவிகளை குறிவைத்து, இதேபோன்று உல்லாசமாக இருந்துள்ளனர். இதற்கு ஒதுக்குப்புறமாக இருக்கும். கரும்பு தோட்டத்தை பயன்படுத்தியதால் யாருக்கும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

அதே வேளையில்,  பைனான்சியர் ராஜாவின், நண்பர்கள்  பலர், தங்கள் மீது சந்தேகம் எழாத வளையில் கள்ளக்குறிச்சி போலீஸ் நண்பர்கள் குழுவில் இருந்து கொண்டு, தங்களது  வாகனங் களில் போலீஸ் என எழுதிவைத்துக்கொண்டு வலம் வந்துள்ளனர். அதைக்கொண்டே பல பெண்களை மிரட்டி வந்த அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளனது. இந்த கொடுமையான சம்பவங்கள் கடந்த 6 மாதத்துக்கு மேலாக கள்ளக்குறிச்சியில் நடந்து வருவதாகவும்,  உள்ளூர் போலீசார் கண்டும் காணாததுமாக இருந்து வந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட ராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தால் பொள்ளாச்சியில் நடந்த சம்பவங்களை மிஞ்சும் அளவுக்கு தகவல் வெளியாகும் எனக்கூறப்படுகிறது.

இதுபோன்ற கொடூரமான செயல்களில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால், காவல்துறையினரும், தமிழக அரசும் இதுபோன்ற பாலியல் குற்றவாளிகள் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்குமா அல்லது பொள்ளாச்சி சம்பவம் போல கிடப்பில் போடுமா?