நெட்டிசன்:

Esan D Ezhil Vizhiyan அவர்களின் முகநூல் பதிவு

நூறாண்டை கடந்து வெற்றிநடை போடும் மல்லூர் மாரியாபிள்ளை நாட்டுமருந்துக் கடை…!

சேலம் சின்னக்கடைவீதியில் உள்ள மல்லூர் மாரியாபிள்ளை நாட்டுமருந்துகடையை அறியாதவர்கள் சேலத்தில் கிடையாது..!

மல்லூரை பூர்வீகமாக கொண்ட சித்தவைத்தியர் தெய்வத்திரு மாரியாபிள்ளை சேலம் சின்னக்கடைவீதியில் 1910 ஆம் ஆண்டு ஆரம்பித்த கடை தான் மல்லூர்மாரியாபிள்ளை நாட்டுமருந்து கடை ஆகும்…!

சேலத்தின் முதல் ஆங்கில மருந்துகடையான சின்னகடைவீதி நரசூஸ் காபி கம்பெனி அருகில் இருந்த சிட்டி மெடிக்கல்ஸ் இவர்கள் ஆரம்பித்தது தான்…!

நூறாண்டு புகழ் பெற்ற பாராம்பரியம் மிக்க மல்லூர் மாரியாபிள்ளை கடையை அவருக்கு பின், அவர் மகன் RIMP டாக்டர் திரு ராஜாபிள்ளை, அவருக்கு அடுத்த மாதவன் (இவரும் RIMP டாக்டர்) மற்றும் நான்காம் தலைமுறையாக இன்று என் அன்பு நண்பர்கள் குமார்( மொபைல் 98655 02233), கிருஷ்ணன் சகோதரர்கள் நிர்வகித்து வருகின்றனர்…! அருகில் மாதவன் சகோதரர் தியாகராஜன் கடையை அவர் மகன் ஜெகன்ராஜ் நிர்வகித்து வருகிறார்…!

சேலம் மக்கள் இன்றும் வீட்டில் திருமணம் கிரகப்பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகள் என்றால் மல்லூர் மாரியாபிள்ளை கடையில் பூஜை சாமான்கள் வாங்குவது தான் கைராசி என்கின்றனர்..! மஞ்சள் குங்குமம், சமித்துகுச்சி ,கற்பூரம், சாம்பிராணி உள்ளிட்ட அனைத்து பூஜை, யாகம் வளர்க்க தேவையானவை இங்கு சிறப்பாக கிடைக்கும்…!

மேலும் கோவில் கும்பாபிசேகங்களுக்கு தேவையான 108 மூலிகைகள், அஷ்டபந்தனம், யாகசாலை பூர்ணாதி சாமான்கள் எல்லாமே இங்கு கிடைக்கும்..! வேப்ப எண்ணெய் ,இலுப்ப எண்ணெய் போன்ற தீபம் ஏற்றும் அனைத்து அரிய எண்ணெய்களும் இங்கு கிடைக்கிறது..!
இதைத்தவிர சித்தா, ஆயுர்வேத மருந்துகளான சூரணம்,லேகியம்,பஸ்பம் தென்னமரக்குடி எண்ணெய் போன்ற தைல வகைகள் ,அனைத்து பொடிவகைகளும் பாரம்பரியமாக கிடைத்து வருகிறது…!

குளியல் பொடி, சீயக்காய் பொடிகளும் கிடைக்கும்..!
குறிப்பாக பிறந்த குழந்தைகளுக்கு உரைப்பான்,வேங்கைப்பொட்டு,எருக்கம்கயிறு, கால்காப்பு,பால்மணி,வசும்பு வளையல் ,ஐந்துகாரபொடி என பேபி செட் இங்கு மட்டுமே கிடைக்கும் என்பது தனிச்சிறப்பு..!
கர்ப்பிணிகள் சுகபிரசவத்திற்கு பிரசவ லேகியமும் இங்கு கிடைக்கும்…!
இப்படி மல்லூர் மரியாபிள்ளை கடையின் பெருமைகளை சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்..!

சேலத்தின் அடையாளங்களில் ஒன்று மல்லூர் மாரியாபிள்ளை நாட்டுமருந்து கடை ஆகும்..!
சேலம் மக்கள் மனதில் ஆழப்பதிந்த கடைகளில் ஒன்று மல்லூர் மாரியாபிள்ளை நாட்டு மருந்து கடை, நூறாண்டை கடந்து இன்றும் தனது சேவையை தொடர்ந்து கொண்டிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது…!


வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்று இன்றும் கடையை திறம்பட நடத்தி வரும் மல்லூர் மரியாபிள்ளையின் கொள்ளுபேரன் என் அன்பு நண்பர் குமார் அவர்களின் பணி மேன்மேலும் சிறக்க எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்…!
வாழ்க வளர்க, மல்லூர் மாரியாபிள்ளை கடை புகழ்…!