ஸ்ரீநகர்:

காஷ்மீரில் பாதுகாப்பு படை வேன் மோதியதில் ஒருவர் இறந்தார். 2 பேர் காயமடைந்தனர்.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் வாலிபர்கள் சிலர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது வாலிபர்கள் கல் வீசி தாக்கினர்.

 

அப்போது வேகமாக வந்த சிஆர்பிஎப் வேன் ஒன்று வாலிபர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேனின் அடியில் 3 பேர் சிக்கிக் கொண்டனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ஒருவர் இறந்தார். இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘வீரர்கள் தங்களை தற்காத்து கொள்ளவே வாகனத்தை திருப்பினர். அப்போது எதிர்பாராதவிமாக சிலர் அதில் சிக்கிக் கொண்டனர்’’ என்று சிஆர்பிஎப் விளக்கமளித்திருந்தது. எனினும் சிஆர்பிஎப் வீரர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.