சென்னை:

தனக்கு ஓட்டுப்போடாதவர்களுக்கு தன்னை கேள்வி கேட்க உரிமையில்லை என நடிகர் கருணாஸ் பேசியுள்ளார். அவரின் இந்த எகத்தாளப் பேச்சு வாக்காளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா தரப்பு ஆதரவு எம்எல்ஏவான கருணாஸ் சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி அவதூறு பரப்புவதாக சென்னை கமிஷனர் ஆபிஸில் புகார் அளித்தார். பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவாடனை தொகுதியில் தனக்கு ஓட்டு போட்டவர்கள் 75000 பேர்தான் என்றும் தனக்கு ஓட்டு போடாதவர்களுக்கு கேள்வி கேட்க உரிமையில்லை என்றும் தெரிவித்தார்.

தான் தைரியமாக எதையும் நேரடியாக பேசுபவதால் தன்னைப்பற்றி அவதூறு பரப்புகிறார்கள். அதை நம்ப வேண்டாம் என்றும் கருணாஸ் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே சசிகலா தரப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் கருணாஸ் மீது தொகுதி மக்கள் கொதிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் அவரது இந்தப் பேச்சு சொந்த தொகுதி மக்களிடையே மட்டுமின்றி ஒட்டுமொத்த வாக்காளர்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.