சென்னை:

னது திருமணத்திற்கு இன்னும் ஒருவாரம் தான் உள்ளது.  என்று தனது புகைப்படத்துடன் ரஜினி மகள் சவுந்தர்யா டிவிட் செய்துள்ளார்.

சூப்பர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில்,  இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வரும் 11ந்தேதி சென்னையில் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக  சவுந்தர்யா தனது தாய் லதா ரஜினிகாந்த்துடன் கடந்த 6ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று, தனது திருமண அழைப்பிழ் வைத்து பூஜை செய்தார். அதைத் தொடர்ந்து முக்கிய நபர்களுக்கு திருமண அழைப்பிதழ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சவுந்தர்யா விசாகன் திருமணம் (மறுமணம்) ரஜினியின் போயஸ்தோட்ட இல்லத்திலேயே நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதையட்டி போலீஸ் பாதுகாப்பும் கோரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சவுந்தர்யா பட்டுப்புடவை மற்றும் நகையுடன் புதுப்பெண் போல அலங்கரிக்கப்பட்ட புகைப்படத்துடன், தனது திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது என்று கூறி டிவிட் போட்டுள்ளார்.

சவுந்தர்யாவின் டிவிட்டை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.  அவருக்கு வலைதளங்களில் வாழ்த்துக்கள் வந்து குவிகிறது.

சவுந்தர்யா – விசாகன்

சவுந்தர்யாவுக்கும்,    சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமார் இடையே கடந்த  2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி திருமணம் நடைபெற்றது.. இருவரும் சுமார் 4 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வேத் என்ற பெயரில்  ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது  இந்த நிலையில், கருத்து வேறுபாடு காணமாக கடந்த 2016ம் ஆண்டு பிரிந்தனர். அதுபோல விசாகனும், முன்னாள் தினகரன் இயக்குனர் கே.பி.கே.குமரனின் மகள் கனிகாவை திருமணம் செய்துவிட்டு, பின்னர் விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.