சென்னை:

சென்னை போன்ற நகரப்பகுதிகளில் வீடு கட்டுவோர், எளிதில் கட்டிட அனுமதி பெற ஆன்லைன் முறை வரும் டிசம்பர் முதல் நடைமுறைக்கு வரும் என்று  துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார்.

‘ஃபிக்கி’ எனப்படும் இந்திய தொழில் வர்த்தக அமைப்பு  சார்பில் மனை வணிக தொழில் மாநாடு மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில்  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணைமுதல்வர் ஓபிஎஸ் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய ஓபிஎஸ்,   இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் 2ம் இடம் வகிப்பதாக கூறினார். மேலும், சென்னை போன்ற நகர்ப்பகுதிகளில் வீடு கட்டுவோர் எளிதில் அனுமதி பெறும் வகையில் ஆன்லைன் முறை வருகிற டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக கூறினார்.

குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்த வர், இதற்காக 13 லட்சத்து 91 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி தர தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாகவும், வரும் 2023 ம் ஆண்டுக்குள் குடிசைகள் இல்லா மாநிலமாக தமிழகம் உருவாகும் என்றும்  நம்பிக்கை தெரிவித்தார்.