சென்னை:

மிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்றுமுதல்  ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகிறது.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது தளர்வுகளுடன் லாக்டவுன் நீடித்து வருகிறது. இந்த நிலை யில், 2020-21ம் ஆண்டு கல்வியாண்டுக்கான பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் தொடங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகளை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை பல்கலைக் கழகம், தனது எல்லைக்கு உட்பட்ட அனைத்து கல்லூரி களிலும் இன்று முதல் முதுகலை வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில்  அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் இன்று (ஆகஸ்டு 3ந்தேதி) முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்படுவதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

அனைத்து அரசு கல்லூரிகளிலும் ஆன்லைன் வழியாக வகுப்புகள் 3-ந்தேதி (நாளை) முதல் தொடங்கப்பட வேண்டும். இணையதள வசதி இல்லாத மாணவ-மாணவிகளுக்கு ‘வாட்ஸ்-அப்’ குழு அல்லது கல்லூரியின் இணையதளத்தில் பாடங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

துறைத்தலைவர்கள் வகுப்புகளின் காலஅட்டவணை, பாடம் தயாரித்தல், மாணவர்களின் வருகைப்பதிவு மற்றும் பாடம் நடத்துதல் குறித்து மாணவர்களின் கருத்துகளை பெறுவதற்கு முறையான திட்டமிடுதலை முதல்வரின் ஆலோசனைபடி மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து மாணவ-மாணவிகளும் ஆன்லைன் வகுப்புகளில் பங்குகொள்வதை துறைத்தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் விவரத்தை அறிக்கையாக இணை இயக்குனருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் வழி வகுப்பு நடைபெறுதலில் அனைத்து பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் தங்களுடைய முழு ஒத்துழைப்பை நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளது.