டில்லி,

ந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஸ்பான்சரை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நியமனம் செய்து அறிவித்துள்ளது.

இந்திய அணியின் தற்போதைய ஸ்பான்சராக  ஸ்டார் டிவி உள்ளது. இந்த ஒப்பந்தம் இந்த (மார்ச்) மாதத்துடன் முடிவடையும் நிலையில், ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க விருப்பமில்லை  என்று ஸ்டார் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஸ்டார் நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017ம் ஆண்டு மார்ச் வரை 5 ஆண்டுகள் ஒப்பந்ததாரராக இருந்தது.

இந்த நிலையில், இந்திய அணியின் புதிய ஸ்பான்சராக, ஓப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளது.

ஓப்போ நிறுவனத்தின் ஒப்பந்தம் அடுத்த (ஏப்ரல்) மாதம் முதல் தொடங்கும் என்றும், இந்த ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் 1079 கோடிக்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கிரிக்கெட் வீரர்களின் உடைகள் மற்றும் இந்திய கிரிக்கெட் டீம் சம்பந்தமான பொருட்கள் அனைத்திலும் ஒப்போவின் லோகோ இடம்பெறும்.

ஓப்போ நிறுவனம் ஏற்கனவே ஐபிஎல் தொடரின் ஸ்பான்சராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.