சென்னை: தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு 23, பாஜகவிக்ரு 20 தொகுதிகள் தேர்தலில் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் கூட்டணியில் உள்ள மற்றொரு பிரதான கட்சியான தேமுதிகவுடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதி பங்கீடு குறித்து எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை.

இரு கட்சிகள் இடையே தொடர் இழுபறி நீடித்து வருகிறது. தேமுதிக தரப்பில் அதிக சட்டசபை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட்டு கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந் நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேமுதிகவுக்கு 15 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டு வழங்க அதிமுக முன் வந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.