டில்லி:

துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட  11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் தொடரப்பபட்ட வழக்கை விரைந்த விசாரிக்க கோரி திமுக சார்பில் உச்சநீதி மன்றத்தில் முறையிடப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம், திமுகவின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அறிவித்து உள்ளது.

எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த  ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கு இன்றைய விசாரணைக்கு பட்டியலிடப் படவில்லை.

இந்த நிலையில், திமுக வழக்கறிஞர்கள் உச்சநீதி மன்றத்தில் இந்த வழக்கு குறித்து முறையிட்டனர். வழக்கை விரைந்த விசாரிக்க வேண்டும் என்றும், வரும் 7ந்தேதியாவது விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் கோரிக்கை வைத்தது.

அதை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம், திமுகவின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.

இதன் காரணமாக பிப்ரவரி 7ந்தேதி ஓபிஎஸ் மீதான வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.