லாஸ் ஏஞ்சல்ஸ்:

சமீபத்தில் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கு,  90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில்  அஞ்சலி செலுத்தப்பட்டது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90வது ஆஸ்கர் விருது விழா துவங்கியது.

சிறந்த திரைப்படம்,சிறந்த இயக்குனர் என மொத்தம் 24 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. திஷே ப் ஆப் வாட்டர் என்ற திரைப்படம் 13 பிரிவுகளின் கீழ் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் நோலனின் டன்கர்க் திரைப்படம் 8 பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
திரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசொளரி என்ற படம் 7 பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் நோலனின் இரண்டாம் உலகப்போர் பற்றிய டன்கிர்க் படம் சிறந்தஒலிக்கலவை,சவுண்ட் எடிட்டிங் உள்ளிட்ட 3 விருதுகளை வென்றுள்ளது.
நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னதாக, சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த  வருடம் டிசம்பர் மாதம் காலமானா இந்தி நடிகர் சசி கபூர் ஆகியோருக்கும் ஆஸ்கார் விழாவில்  அஞ்சலி செலுத்தப்பட்டது.