ஜம்மு:

காஷ்மீர் மாநிலம் ராஜோரி செக்டாரில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்தியா பதிலடி கொடுத்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. மாலை 5:30 மணிக்கு தொடங்கிய துப்பாக்கி சண்டை 6:20 வரையில் நீடித்தது. பாகிஸ்தான் கடந்த 29, 28ம் தேதிகளில் சுந்தர்பானி மற்றும் பூஞ்ச் செக்டாரில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.