லண்டன்: புதிய வகை கொரோனா வேகமாக பரவும் சூழலில் அஸ்ட்ராஜெனெகா – ஆக்ஸ்போர்டு  தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒப்புதல் வழங்கி உள்ளது.

இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 53 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட  கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 53,135 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தலைநகர் லண்டனில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு மொத்தமாக முடங்கியுள்ளது.

லண்டன் மருத்துவமனைகளில் இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனைகளுக்கு வெளியே கூடாரங்கள் அமைத்து நோயாளிகளை பராமரிக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

இந் நிலையில் பைசர் தடுப்பூசியை தொடர்ந்து ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கும் இங்கிலாந்து ஒப்புதல் வழங்கி இருக்கிறது. உருமாறிய கொரோனா வேகமாக பரவும் சூழலில் 2வது தடுப்பூசிக்கு இங்கிலாந்து  ஒப்புதல் அளித்து இருக்கிறது. இந்தியாவில் ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.