சென்னை: 2021ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெறும் என முன்னாள் மத்திய  நிதியமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. திமுக கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு உள்பட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது அமைக்கப்பட்ட கூட்டணியே சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப சிதம்பரம் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெறும் என கூறியதுடன், ‘பாஜக கூட்டணியில்தான் நீடிப்போம் என என்று அதிமுக அறிவித்ததோ அன்றே அவர்கள் தோல்வி உறுதியாகிவிட்டது.  தேர்தலுக்கு 100 நாட்கள் உள்ள நிலையில் திமுக கூட்டணி கடுமையாக உழைத்தால் எளிதாக 200 தொகுதிகளுக்கு மேல்  வெற்றி பெறலாம்’ எனக் கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு  பேச்சுவார்த்தையின் போது சிக்கல்கள் வளர வாய்ப்புகள் உள்ளதா என்று கேட்டதற்கு,  திமுக – காங்கிரஸ் கூட்டணி 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நடந்ததைப் போலவே தமிழ்நாட்டிலும் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.  அதிமுக-பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்ட உடனேயே திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

ரஜினி தொடர்பான கேள்விக்கு,   நடிகர் ரஜினிகாந்த் தனது  நீண்டகால நண்பர். அவரது உடல்நலம் முக்கியம். அவர் அரசியலில் இருந்து விலகுவதற்கான முடிவை வரவேற்பதாக கூறினார்.

அதிமுக பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு,  மாநில அளவிலானபாஜக தலைவர்கள்  “நகைச்சுவைகளை”  செய்வது வருவதாக விமர்சித்தார்.

தற்போது  நாட்டின் பொருளாதாரத்தின் நிலை எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, குறித்து,  ஏற்றுமதி மீண்டும் குறைந்துவிட்டது, நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் உயர்ந்துள்ளது என்றார்.

வேளாண் சட்டங்கள் தொடர்பான கேள்விக்கு, வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லிக்கு அருகிலுள்ள விவசாயிகளின் போராட்டத்திற்கு வந்தபோது மத்தியஅரசு  தனது “பிடிவாத மனப்பான்மையை” கைவிடவில்லை; என்று விமர்சித்தவர், ஜிஎஸ்டி மற்றும் சீனாவுடனான உறவுகளுடன் அது உருவாக்கிய குழப்பம். மக்களின் உணர்வுகள், பாராளுமன்றம் அல்லது பாராளுமன்ற விவாதங்களை பாஜக அரசு கவனிக்கவில்லை என்று  குற்றம் சாட்டினார்.