கெஜ்ரிவாலுக்கு ப.சிதம்பரம் கேள்வி

தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

சில நாட்களாகத் தினம்தோறும் ஆயிரம் பேர் வரை கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் ’’டெல்லியில் உள்ள மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெல்லி வாசிகளுக்கு மட்டுமே கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என டெல்லி முதல்- அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்த ஆணை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

( இந்த உத்தரவை டெல்லி ஆளுநர் நேற்று நீர்த்துப் போகச்செய்து விட்டது தனிக்கதை.)

இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்’’ டெல்லி வாசி என்பவர் யார்?’’ என டெல்லி முதல்-அமைச்சர் கெஜ்ரிவாலுக்கு வினா எழுப்பியுள்ளார்.’நான் டெல்லியில் வசிக்கிறேன். டெல்லியில் தொழில் செய்கிறேன். நான் டெல்லி வாசி தானா?’’ என்றும் அவர் கேள்வி கேட்டுள்ளார்.

‘’இப்படி ஒரு உத்தரவைப் பிறக்கும் முன்பாக யாரிடமாவது  சட்ட ஆலோசனை கேட்டீர்களா” என்றும் ப.சிதம்பரம், டெல்லி முதல்வரை வினாக்களால் துளைத்து எடுத்துள்ளார்.