டில்லி

யிற்று வலி காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்

முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐயால் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். சிபிஐ அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த பின்னர் அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.   சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் 14 நாட்கள் வீதம் 3 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜாமீன் கேட்டு சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அவரது ஜாமீன் வழக்கு வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  சிறை உணவு தனது உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லை என சிதம்பரம் கூறியதால், அவருக்கு ஒருவேளை மட்டும் வீட்டுச் சாப்பாடு அளிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.   ஆயினும் சிறையில் இருந்த ப.சிதம்பரம், தனக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாகக் காவலர்களிடம் கூறினார்.

இதனால் காவலர்கள் அவரை சிறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.   அவரை பரிசோதித்த சிறை மருத்துவர் மருத்துவ பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப் பரிந்துரை செய்தார்.   அந்த பரிந்துரையின்படி அவரை பலத்த பாதுகாப்புடன் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சிறைக் காவலர்கள் அழைத்துச் சென்றனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அவரை தீவிரமாகப் பரிசோதித்தனர். அதன் பிறகு வயிற்று வலிக்கு உரிய மருந்து, மாத்திரைகளை அளித்ததையடுத்து, ப.சிதம்பரத்தை மீண்டும் திகார் சிறைக்குக் காவல் துறையினர் கொண்டு சென்றனர்.