இந்திய மல்டிநேஷனல் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனமான பிரமிட் சாய்மிரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் பி.எஸ்.சுவாமிநாதன் உடல்நலக் குறைவால் காலமானார்.

குசேலன் , பில்லா , மொழி , எவனோ ஒருவன் , நான் கடவுள் போன்ற படங்களை விநியோகம் செய்திருக்கிறார்.

நீண்ட நாட்களாக நீரிழிவு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று அதிகாலை 2.30மணியளவில் உயிரிழந்தார்.

பி.எஸ்.சுவாமிநாதனின் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.