சியோல்

கொரியா ஒப்பன் பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை பி வி சிந்து வெற்றி பெற்றுள்ளார்.

இன்று நடந்த கொரியா ஒப்பன்  பாட்மிண்டன் 2017 போட்டியின் இறுதிச் சுற்றில் பி வி சிந்து நோஸோமி ஒகுஹாராவுடன் மோதினார்.   இந்த போட்டியின் மூன்று செட்டுகளில் 22-20, 10-21, 21-18 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி வாகை சூடினார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற முதல் பெண் பி வி சிந்து என்பது குறிப்பிடத் தக்கது.