சித்தூர் ராணி பத்மாவதியின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தித் திரைப்படம் பத்மாவத்.    இந்தப் படம் கடும் எதிர்ப்புகளுக்கு இடையில் வெளியாகி வெற்றி வாகை சூடி உள்ளது.   ரூ. 300 கோடிக்கும் மேல் வசூலான திரைப்பட வரிசையில் இந்தப் படமும் இடம் பெற்றது.

இந்தப் படத்தில் சுமார் 35 கிலோ எடை கொண்ட நகைகளை அணிந்து கதாநாயகி தீபிகா படுகோனே நடித்திருந்தார்.    அந்த நகைகள் வடநாட்டுப் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.   இது போன்ற நகைகள் அனைத்து கவரிங் நகைகள் மற்றும் பேன்சி ஸ்டோர்களில் பெருமளவில் விற்பனை ஆகின்றன.

வட இந்தியாவில் உள்ள வர்த்தகர்கள் தற்போது இந்த நகை விற்பதினால் நன்கு வருமானம் ஈட்டி வருகின்றனர்.

ஆனால் வட இந்தியாவில் இவ்வளவு வரவேற்பை பெற்றுள்ள பத்மாவத் நகைகளுக்கு தென் இந்தியாவில் சிறிதும் வரவேற்பு இல்லை.