இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பிரபலமான கவ்வாலி பாடகர் அம்ஜத் சப்ரி -2016ம் ஆண்டு கராச்சி நகரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது உள்பட 62 பேர் பலியான பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான வெவ்வேறு வழக்குகள் அந்நாட்டு ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தன.

-2014ம் ஆண்டு ராணுவப் பள்ளி மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் வழக்குகளை விசாரித்து, தண்டிக்கும் பொறுப்பு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ரகசிய இடங்களில் உள்ள ராணுவ நீதிமன்றத்தில் சில வழக்குகளின் விசாரணை முடிவுக்கு வந்துவிட்டது. மிகக் கொடூர தாக்குதல்களில் ஈடுபட்ட 10 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மரண தண்டனையை உறுதிப்படுத்தி பாகிஸ்தான் ராணுவ தளபதி காமெர் ஜாவெத் பாஜ்வா இன்று உத்தரவிட்டுள்ளார். இதுதவிர மேலும் 5 பயங்கரவாதிகளுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.